×

பிரமோற்சவத்தையொட்டி சீர்காழி கழுமலை அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

சீர்காழி, ஏப்.3: பிரமோற்சவத்தையொட்டி சீர்காழி கழுமலை அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற கழுமலைஅம்மன் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் நிகழாண்டு கடந்த 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 5ம் நாள் மண்டகப்படி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக கழுமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்து வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.


Tags : Krishna ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...