×

கைதி தற்கொலை முயற்சி

புழல், ஏப். 3: சென்னை ராமாபுரம் மந்தார தோட்டம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (24). கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை, எம்ஜிஆர் நகர் போலீசார் கடந்த 31ம் தேதி கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று மாலை தனது அறையின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்ற இவர், பிளேடு மூலம் தொண்டை, இடது வலது மணிக்கட்டு உள்ளிட்ட பல இடங்களில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு மற்ற கைதிகள் உடனே சிறை காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். சிறை காவலர்கள் விரைந்து வந்து, அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்