×

ஆசீர்வாதம் செய்வதுபோல் நடித்து மூதாட்டியிடம் ₹8 ஆயிரம் பறிப்பு

சென்னை, ஏப். 3: ஆசீர்வாதம் செய்வது போல் நடித்து மூதாட்டியிடம் ₹8 ஆயிரத்தை பறித்துச்சென்ற திருநங்கைகள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.மயிலாப்பூரை சேர்ந்தவர் ரேவதி (65). இவர், நேற்று முன்தினம் மாலை உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு திரும்பினார். லஸ் கார்னர் அருகே வரும்போது, 3 திருநங்கைகள், ரேவதியை சூழ்ந்து கொண்டு ‘அம்மா திருநங்கைகளுக்கு உதவி செய்யுங்கள்’ என்று கூறியுள்ளனர். இதையடுத்து ரேவதி, தனது பையில் இருந்து 10 ரூபாயை எடுத்து கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட திருநங்கைகள், ஆசீர்வாதம் செய்வது போல் நடித்து, அவர் வைத்திருந்த பையை பறித்துக்கொண்டு தயாராக நின்ற ஆட்டோவில் தப்பி ஓடிவிட்டனர். அதில், ₹8 ஆயிரம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரேவதி, மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து திருநங்கைகளை தேடி வருகின்றனர்.


Tags :
× RELATED திருவேற்காடு கூவம் ஆற்றங்கரையோரம்...