×

புழல் சிறையில் கைதி தற்கொலை முயற்சி

சென்னை, ஏப். 3: புழல் சிறையில் அடைக்கப்பட்ட கைதி உடல் முழுவதும் பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ராமாபுரம் மந்தார தோட்டம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (24). இவர் கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, கடந்த 31ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் நேற்று மாலை அருண்குமார், சிறை அறையின் பின்புறம் உள்ள கழிப்பறைக்கு சென்று, பிளேடு மூலம் தொண்டை, இடது வலது மணிக்கட்டு உள்ளிட்ட பல இடங்களில் அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அலறி துடித்த அவரை பார்த்து சக கைதிகள் அதிர்ச்சியடைந்தனர்.தகவலறிந்து, சிறை காவலர்கள் அங்கு சென்று, ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மீட்டு, சிறை மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். பின்னர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புகாரின்படி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Tags :
× RELATED கணிதத்துறை கருத்தரங்கம்