×

வையம்பட்டி அருகே வாலிபர்அடித்து கொலையா? போலீஸ் விசாரணை

மணப்பாறை, மார்ச் 29: வையம்பட்டி அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர் சடலத்தை மீட்ட போலீசார் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த குமாரவாடி ஊராட்சி ஆனாங்கரைப்பட்டியை சேர்ந்தவர் செம்பன். இவரது மகன் பொன்னுசாமி(22). இவர் நேற்று அதிகாலை அப்பகுதியில் உள்ள கோயில் அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்த வையம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதற்காக ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது ஆத்திரமடைந்த பொன்னுசாமி உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை முற்றுகையிட்டு உடலை காட்டும்படி கூறினர். பின்னர் உடலை காட்டியதும் ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் இறந்துபோன பொன்னுசாமியின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சவுண்ட் சர்வீஸ் உரிமை யாளர் பலி: துறையூரை அடுத்த புலிவலம் அருகே திருத்தலையூரை சேர்ந்தவர நடராஜன் (50). சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வந்தார். இவர் சொந்த வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் புலிவலம் வந்து விட்டு வேலை முடிந்ததும் அங்குள்ள பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு மீண்டும் துறையூர் திரும்பினார். திருச்சி- துறையூர் சாலையில் வந்தபோது துறையூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்து டூவீலரில் மோதியது. இதில் நடராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார்.விபத்து பற்றி தகவல் அறிந்த புலிவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தகவலறிந்த புலிவலம் போலீசார் பேருந்து தனியார் பேருந்து ஓட்டுனர் நாகலாபுரத்தை சேர்ந்த மகாதேவன் (33) என்பவரை கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : investigation ,Vayampatti Police ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...