×

திருச்சி விமான நிலையத்தில் ரங்கம் ராஜகோபுர மாதிரி வடிவம் திறப்பு

திருச்சி, மார்ச் 29: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஏற்கனவே தமிழகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில்  திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதேபோன்று திருச்சி மாநகரின் சிறப்புகளை பறைசாற்றும் வகையில் திருச்சி விமான நிலையத்தில் ரங்கம் கோயிலின் ராஜகோபுரத்தின் மாதிரி வடிவமைப்பினை விமான  நிலையத்தில் நிறுவ வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் திருச்சி விமான நிலையத்தில் ரங்கம் ராஜகோபுரம் வடிவம் உருவாக்கப்பட்டு இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த ராஜகோபுரம்  மாதிரி வடிவம் 9 அடி உயரத்தில் ரூ. 6 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டு திருச்சி விமான நிலையத்தின் பயணிகள் புறப்படும் வாயிலின் முன்புறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.  இதனை வருமான வரித்துறையின் முதுநிலை ஆணையர் பிரமோத் நர்க்கியா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வருமான வரித்துறை ஆணையர் மன்வேந்திரா, மத்திய பாதுகாப்பு படை துணை ஆணையர் சந்தோஷ் குமார் மற்றும் விமான நிலைய இயக்குனர் குணசேகரன்,  முனைய மேலாளர் சென், பூம்புகார் நிறுவனத்தின் மேலாளர்  கங்காதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த ராஜகோபுர வடிவம் திருச்சி மாநகரின் பெருமையை உலக மக்கள் அனைவரும் பார்த்து வியக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


Tags : airport ,Trichy ,opening ,Rajagopura ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..!!