×

திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் 5 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

திருத்துறைப்பூண்டி, மார்ச் 29: திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருத்துறைப்பூண்டி நகர பகுதிகளில் வணிக நிறுவனங்கள், சூப்பர்  மார்க்கெட், உணவகங்களில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்  விற்பனை செய்யப்படுகிறதா, பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து நகராட்சி  ஆணையர்(பொ)பாஸ்கரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும்  அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.  இந்த ஆய்வில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தடை  செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை  செய்த 5 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.திருத்துறைப்பூண்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையில்  தொடர்ந்து விதி மீறி செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது நீதிமன்றம் மூலம்  நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர்(பொ)பாஸ்கரன் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

Tags : shops ,area ,Tiruthuraipoondi ,
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!