×

கோபி அருகே பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது

கோபி, மார்ச் 29: கோபி அருகே பெண்ணைக் கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே பிள்ளையார்கோயில் துறை பகுதியில் தடப்பள்ளி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் கரையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் சத்தம் கேட்டு பொதுமக்கள் சென்று பார்த்த போது அங்கு ஒரு பெண் அரை நிர்வாண கோலத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.அவரை பொதுமக்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண் அளுக்குளி அருகே அம்பேத்கர் காலனியை சேர்ந்த  குமார்  மனைவி தங்கமணி (32) என தெரியவந்தது. தங்கமணி, கடந்த மூன்று ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன்பின், குமாரின் உறவினர் பெருமுகைப்புதூரை சேர்ந்த சின்னச்சாமி (38) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவரை பிடித்து  விசாரித்ததில் சம்பவத்தன்று இவரும், தங்கமணியும் வாய்க்கால் கரையில் உல்லாசமாக இருந்தபோது சின்னச்சாமிக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது குறித்து தங்கமணி கேட்டுள்ளார்.இதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் தங்கமணியை சரமாரியாக சின்னச்சாமி தாக்கிவிட்டு வயலில் தலையை அமுக்கி உள்ளார். இதில், தங்கமணி மயங்கியதால் தள்ளிவிட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து சின்னச்சாமியை போலீசார் கைது செய்தனர்.

Tags : Kallakkadanan ,Kobe ,
× RELATED கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி; “கோடியில் இருவர்” வெப் சீரிஸ்