×

பெருமாநல்லூரில் ஏப். 3ல் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்

அவிநாசி,மார்ச் 29; திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் செங்கப்பள்ளி செல்லும்  பைபாஸ் ரோட்டின் இடதுபுறமுள்ள மைதானத்தில்  ஏப்ரல் 3ம் தேதி  திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு, தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அப்போது திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  வேட்பாளர் சுப்பராயனுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு சிறப்புரையாற்றுகிறார். இதையொட்டி, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ், நேற்று அங்கு நேரில் சென்று  கூட்டம் நடைபெறும் இடத்தையும், மேடை அமைப்பது பற்றியும் பார்வையிட்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில், மாவட்ட இளைஞரணி செயலாளர் தங்கராஜ், மேடை அமைப்பாளர் தஞ்சை சிவா மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

Tags : Stalin ,
× RELATED பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த...