×

வேளாங்கண்ணி லாட்ஜில் விபசாரம் 2 பேர் கைது

நாகை, மார்ச் 29:  வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் விபசாரம் நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து நாகை எஸ்பி விஜயகுமார் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நடத்திய திடீர் சோதனை நடத்தினர். அப்போது கிராமத்துமேட்டை சேர்ந்த குகன் (40), காமேஸ்வரத்தை சேர்ந்த பிரபு (23) ஆகியோரை கைது செய்தனர். மேலும் விடுதியின் உரிமையாளர் மைக்சன் மற்றும் வேளாங்கண்ணியை சேர்ந்த பகவதியம்மாள் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.பைக்கில் சாராயம் கடத்திய  2 பேர் கைது:நாகை எஸ்பி உத்தரவின்பேரில் நாகூர் போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் வெட்டாறு பாலம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் பாண்டி சாராயம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பைக்கை ஓட்டி வந்த நாகை வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் ரோட்டை சேர்ந்த சுரேஷ் (32), செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தியாகேஸ்வரன் (19) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 லிட்டர் பாண்டி சாராயமும், பைக்கும் கைப்பற்றப்பட்டது.

Tags : persons ,Velankanni ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...