×

திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்

திருவண்ணாமலை, மார்ச் 29: திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 21ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்தநிலையில் கடந்த 20ம் தேதி தோட்டத்துக்கு சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறி சென்ற இளம் பெண் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை தாலுகா போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 25ம் தேதி இரவு தனது வீட்டில் பெற்றோரிடம் படுத்து தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மாணவியை காணவில்லை. இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Thiruvannamalai ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...