×

வாகன ஓட்டிகள் அவதி கருப்புக்கொடி எதிர்ப்பு

அருப்புக்கோட்டை, மார்ச் 29: அருப்புக்கோட்டை அருகே உள்ளது சின்னக்கட்டங்குடி. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு விநாயகர் மற்றும் சந்தனமாரியம்மன் கோயில்கள் உள்ளன. நீண்ட காலமாக விநாயகர் கோயிலில் சாமி கும்பிடுவதிலும், திருவிழா நடத்துவதிலும் இருதரப்பினருக்கு இடையே பிரச்னை உள்ளது. கோயில் மராமத்து பணிகள் மேற்கொள்ளவும், சாமி கும்பிட அனுமதி கோரியும், இருதரப்பினரும் போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை கண்டித்தும், தங்கள் உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்தும், சந்தனமாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்திற்கு பட்டா கேட்டும் நேற்று ஒரு தரப்பினர் தங்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags : Motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...