×

இறுதி ஊர்வலத்தில் மோதல் 6 பேர் காயம்; 11 பேர் கைது

சிங்கம்புணரி, மார்ச் 29: சிங்கம்புணரியில் இறுதி ஊர்வலத்தில் நடந்த இருதரப்பு மோதலில் 6 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். சிங்கம்புணரி செல்வவிநாயகர்கோயில் தெருவை சேர்ந்தவர் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது இறுதி ஊர்வலத்தில் சென்ற சிலருக்கும் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் கண்ணன், கோபிநாத், விஜய், ராஜேஸ், மணிகண்டன், சுதர்சன் ஆகிய 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மூர்த்தி மற்றும் சுதர்சன் தரப்பினர் கொடுத்த புகாரில் அப்பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி(21), சேவுகமூர்த்தி(24), கோபால்(24), சுப்பிரமணியன்(20), மூர்த்தி(40), சந்திரன், செல்வம், பாலமுருகன், துரைசாமி உள்ளிட்ட 11 பேரை சிங்கம்புணரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்பகுதியில் மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : funeral procession ,
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...