×

20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளையா? நிலக்கோட்டை யூனியன் அலுவலகம் முற்றுகை பொதுமக்கள் ஆவேசம்

வத்தலக்குண்டு, மார்ச் 29: முறையாக குடிநீர் விநியோகிக்க ேகாரி நிலக்கோட்டை யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குபட்பட்டது பாலம்பட்டி, பாறையூர். இப்பகுதியில் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் போதிய குடிநீரின்றி அல்லல்பட்டு வருகின்றனர். மேலும் தட்டுப்பாட்டை சமாளிக்க குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவலம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் முறையாக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்பிறகே மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Nilkottai Union ,office ,
× RELATED ஆரணி வட்டார போக்குவரத்து...