×

புலியூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமை: குழந்தைகள் உள்பட 28 பேர் மீட்பு

கரூர், மார்ச் 29:கரூர் மாவட்டம் புலியூர் அடுத்துள்ள ஒரு செங்கல் சூளையில் விழுப்புரம் மாவட்ட பகுதிகளை சேர்ந்த சிலர் குடும்பத்தினர் கடந்த ஐந்தாண்டுகளாக கொத்தடிமைகளாக தங்கி பணியாற்றி வருவதாக கரூர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனடிப்படையில் நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள் அங்கு குடிசை போட்டு தங்கி பணியாற்றிய 9 குழந்தைகள் உட்பட 28 பேரை மீட்டு, வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் கொத்தடிமைகளாக பணியாற்றினார்களா என்பது குறித்து கரூர் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி இன்று விசாரணை நடத்தவுள்ளார்.

Tags : brick kiln room ,Puliyur ,children ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...