×

ராஜபாளையம் எம்எல்ஏ தங்கபாண்டியன் தென்காசி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

ராஜபாளையம், மார்ச் 29: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்காசி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ்.எம்.குமாரை ஆதரித்து ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பிரசாரம் செய்தார்.
ராஜபாளையம் பகுதி சொக்கநாதன்புத்தூர், மேலூர், துரைச்சாமிபுரம், கோவிலூர், தெற்கு தேவதானம், வடக்கு தேவதானம், கோரையாறு நகர் ஆகிய பகுதிகளில் வாக்குச் சேகரித்தார்.அப்போது அனைத்து தெருக்களிலும் பொதுமக்கள், இளம் வாக்களர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில் ராஜபாளையம் எம்எல்ஏ பேசுகையில், ‘மத்திய, மாநில அரசுகளின் அவலங்களை எடுத்துரைத்தார். குறிப்பாக, ரூ.500, 1000, பணம் மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி பாதிப்பு, நீட் தேர்வு கொடுமையால் அனிதா தற்கொலை, விவசாயிகள் தற்கொலை போன்ற பல்வேறு குறைகளை எடுத்துக் கூறினார்.மேலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் கல்விக்கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் பேசினார். மேலும் நமது வேட்பாளர் தனுஷ் எம்.குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் 18 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று தமிழக முதல்வராக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்கவும் ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.உடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், நகர செயலாளர் ராமமூர்த்தி, வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணன், சிபிஎம் ராமர், சிபிஐ கணேசமூர்த்தி, விடுதலை சிறுத்தை ஊமத்துரை, ஆதித்தமிழர் கட்சி, ஆதிதமிழர் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Rajapalayam MLA ,DMK ,candidate ,
× RELATED மோடியிடமிருந்து இந்தியாவை...