×

காஷ்மீர் தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்கள் குடும்பத்திற்கு கனரா வங்கி ஊழியர்கள் நிதியுதவி

தூத்துக்குடி, மார்ச் 29: காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதி நடத்திய கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் படை வீரர்கள் குடும்பத்திற்கு கனரா வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் நிதியுதவி வழங்கினர். கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் கான்பால் என்ற பெயரில் பல்வேறு சமுதாய சேவைகளை செய்து வருகிறது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி மாவட்டம் சவலாபேரியை சேர்ந்த வீரர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு சங்கத்தின் சார்பில் 50 ஆயிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்க பொதுச்செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மண்டல சங்கச் செயலாளர் கோபி கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் மண்டல தலைவர் முருகேசன், மாவட்டச் செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதே போல் இத்தாக்குதலில் உயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்தினருக்கும் சங்கத்தின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

Tags : Canara ,bank employees ,attack ,Kashmir ,soldiers ,CRPF ,
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...