தக்கலை, மார்ச் 29: கேரள மாநிலம் கோழிக்கோடு கொடுங்கல்லூரைச் சேர்ந்தவர் முகமது சாகுல் (23). தக்கலை அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். பிலாங்காலை பகுதியில் தங்கி இருக்கிறார். இவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இவருக்கு சொந்தமான பைக் மாயமானது. இது தொடர்பாக தக்கலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் திருடிய ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் காட்டாத்துறையை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 3 பேர் பைக்கை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.