×

முத்துப்பேட்டை அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் 2 டிரைவர்கள் கைது

முத்துப்பேட்டை, மார்ச்28: முத்துப்பேட்டை பகுதிக்கு மணல் கடத்தி திருடப்பட்டு வருவதாக  நேற்று முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து எஸ்ஐ சிலம்புசெல்வன் தலைமையில் போலீசார் கீழக்காடு பைபாஸ் சாலையில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் முகாமிட்டு இருந்து கண்காணித்து வந்தனர்.அப்போது பட்டுக்கோட்டை சாலையிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனை செய்து விசாரணை நடத்தியதில் தம்பிக்கோட்டை பாமணி ஆற்றிலிருந்து முத்துப்பேட்டைக்கு மணல் திருடி கொண்டு வந்தது தெரியவந்தது.இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் அதிரை பள்ளிக்கொண்டான் கிராமத்தை  சேர்ந்த காமராஜ் மகன் கலைராஜன்(25) கைது செய்யப்பட்டார்.அதேபோல் முத்துப்பேட்டை அடுத்த செம்படவன்காடு பைபாஸ் சாலையில்  எஸ்ஐ  நாகராஜ் தலைமையில் போலீசார் முகாமிட்டு இருந்து கண்காணித்து வந்தனர்.அப்போது பட்டுக்கோட்டை சாலையிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனை செய்து விசாரணை நடத்தியதில் தம்பிக்கோட்டை பாமணி ஆற்றிலிருந்து முத்துப்பேட்டைக்கு மணல் திருடி கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார்  டிரைவர்  ராமநாதபுரம் ஓரிவயல் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் கபில் என்கிற கபிலன்(24) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Muthupet ,
× RELATED முத்துப்பேட்டை அருகே...