×

மதிமுக வேட்பாளரை ஆதரித்து மார்ச் 29ல் வைகோ பிரசாரம்

ஈரோடு, மார்ச் 28:  ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து வரும் 29ம்தேதி முதல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஈரோட்டில் பிரசாரம் செய்ய உள்ளார்.அதன்படி 29ம்தேதி மாலை 4 மணிக்கு வீரப்பன்சத்திரம் பகுதியில் பிரசாரத்தை துவங்கும் அவர் வீரப்பன்சத்திரம், சூளை, கனிராவுத்தர் குளம், வில்லரசம்பட்டி, திண்டல், மேட்டுக்கடை, நசியனூர், சித்தோடு, காளிங்கராயன்பாளையம், சூரியம்பாளையம் ஆர்.என்.புதூர், பெரியஅக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து 30ம் தேதி காலை 7 மணிக்கு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பிரசாரம் துவங்குகிறார்.

சூரம்பட்டி பஸ் ஸ்டாப், சூரம்பட்டிவலசு மாரியம்மன் கோவில், சங்குநகர், பழையபாளையம், அணைக்கட்டு ரோடு, காசிபாளையம், முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட், சாஸ்திரிநகர், நாடார்மேடு, மூலப்பாளையம், கொல்லம்பாளையம், சோலார், வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மரப்பாலம், வளையக்கார வீதி, கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். 31ம் தேதி காலை 7 மணிக்கு வெட்டுக்காட்டுவலசு பகுதியிலும், இதைத்தொடர்ந்து அண்ணா தியேட்டர், பெரியவலசு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்,  மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதி, ஈபிபிநகர், சூளை, நெரிக்கல்மேடு, கிருஷ்ணம்பாளையம், திருநகர் காலனி நால்ரோடு, போஸ்ட் ஆபீஸ் நால்ரோடு, ராஜாஜிபுரம், சத்திரோடு, பிருந்தாச்சாரி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி, பிரப்ரோடு, கைக்கோளன் தோட்டம், பெரியார்நகர் ஆகிய பகுதிகளிலும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு வைகோ பிரசாரம் செய்கிறார்.


Tags : campaign ,Vaiko ,candidate ,
× RELATED பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய்...