×

நாளை முதல்வர் வருகை விழுப்புரம் சரக டிஐஜி சேத்தியாத்தோப்பில் ஆய்வு

சேத்தியாத்தோப்பு, மார்ச் 28:கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார் ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை (29ம் தேதி) சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரசேகருக்கு வாக்குகள் சேகரிக்க சேத்தியாத்தோப்பு நகருக்கு வருகை தருகிறார். இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் செய்யும் ராஜீவ்காந்தி சிலைப்பகுதி அருகில் உள்ள இடத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எவ்வாறு செய்வது என்பது குறித்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணனிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது சேத்தியாத்தோப்பு காவல் உட்கோட்ட கண்காணிப்பாளர் ஜவஹர்லால், காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ், தலைமை காவலர் செந்தில்குமார், திருமுருகன் உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் உடனிருந்தனர்.

Tags : Chief Minister ,visit ,Vilupuram ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...