×

தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பாஸ்டர் மோகனை சந்தித்து வாழ்த்து: சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதாக உறுதி

சென்னை: தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், கிறிஸ்தவ போதகர் மோகனை சந்தித்து வாழ்த்து பெற்றார். தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று காலை 12 மணி அளவில் சின்னமலை புதுவாழ்வு கிறிஸ்தவ தேவாலயம் சென்ற அவர் அங்கு தேவாலய தலைவரும் பாஸ்டருமான மோகனை சந்தித்து ஆதரவு திரட்டினார். மேலும் அவரிடம் வாழ்த்தும் பெற்றார். அப்போது, சிறுபான்மையினருக்கு ஆதரவாக திமுக எப்போதும் இருக்கும் என்று தமிழச்சி தங்கபாண்டியன் உறுதி அளித்தார். அதை தொடர்ந்து ஜெபம் செய்து சிறுபான்மையினர் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் என்று போதகர் மோகன் கூறினார். இதையடுத்து பகல் 1 மணி அளவில் வேளச்சேரி அடுத்த தரமணி ஹேமா திருமண மண்டபத்தில் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

முழு அளவில் ஒத்துழைப்பு தரும்படி கேட்டார். அவர்களும் உற்சாகமாக களப்பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். இரவு 7 மணி அளவில் தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடைபெற்ற வைகோ பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அதை தொடர்ந்து, இரவு 8 மணி முதல் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து வைகோ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் மேற்கு சைதாப்பேட்டை சாரதி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு, தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது பெண்கள் ஏராளமானோர் திரண்டு வந்து ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். சிலர் பூக்களை அள்ளி வீசி, ‘‘எங்கள் வாக்குகள் உங்களுக்கு தான்’’ என்று தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Tags : candidate ,DMK ,Mohan ,Tamil Nadu ,Tamilnadu Thangapandian ,
× RELATED மோடியிடமிருந்து இந்தியாவை...