×

‘ஓசி’ பயணம் செய்வோரை கட்டுப்படுத்த எம்டிசி பஸ்களில் சிறப்பு பரிசோதனை: வருவாய் இழப்பை தடுக்க திட்டம்

சென்னை: மாநகர போக்குவரத்துக்கழகம் (எம்டிசி) சார்பில் தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அலுவலகம், பள்ளி, கல்லூரி என பல்வேறு இடங்களுக்கு தினசரி 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு பயணம் செய்ேவாரில் ஒருசிலர் நிர்வாகத்தை ஏமாற்றி டிக்கெட் எடுக்காமல் பயணிக்கின்றனர். இதனால் எம்டிசிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக அவ்வப்போது பரிசோதகர்கள் மூலம் ஆய்வு நடத்தப்படுகிறது. அப்போது சிக்குவோருக்கு அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் சமீபகாலமாக நிர்வாகத்தை ஏமாற்றி பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறப்பு பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று கோயம்பேடு, எம்எம்டிஏ, கோயம்பேடு பள்ளி ஆகிய பஸ் நிறுத்தங்களில் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து இதேபோல் ஆய்வு அனைத்து இடங்களிலும் நடத்த அதிகாரிகள் முடிவு ெசய்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ேவாரை கட்டுப்படுத்த சிறப்பு பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோயம்பேடு, எம்எம்டிஏ பகுதியில் சிறப்பு பரிசோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து டிக்ெகட் எடுக்காமல் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் தொடர்ந்து திடீர் பரிசோதனை நடத்தப்படும். இதில் சிக்குவோர் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர். 

Tags : travelers ,MTC ,OCI ,
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...