பணகுடி, மார்ச் 28: தமிழ்நாடு டென்ட் டீலர்ஸ் சங்க தொடக்கவிழா மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா பணகுடியில் நடைபெற்றது. விழாவிற்கு அகில இந்திய டென்ட் டீலர்கள் நலச்சங்க தலைவர் அனில்குமார் ஆசாத் தலைமை வகித்தார். பொதுசெலாளர் கட்டார்சிங் கோச்சா முன்னிலை வகித்தார். சட்ட ஆலோசகர் இன்டர்சந்த், நிர்வாகி விபுல்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் சங்க ஆலோசகர் வேலுசாமி வரவேற்றார். இதில் தலைவராக பணகுடி பிரவீன்குமார், செயலாளராக சென்னை மணி, பொருளாளர் சென்னை சித்திரை செல்வன், கவுரவத்தலைவர் மணி, ஆலோசகர் வேலுசாமி, துணைத்தலைவர் ஸ்டாலின், மக்கள் தொடர்பு நிர்வாகி தனராஜ், துணைசெயலாளர் மணிவேல், கவுரவ தலைவர் பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 450க்கும் மேற்பட்ட டென்ட் டீலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தமிழ்நாடு டென்ட் டீலர்கள் நலசங்கத்திற்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பைபர், தரைவிரிப்பு, துணி ஸ்கிரீன்கள், மணமக்கள் அமரகூடிய சோபா, மேடைகளில் உபயோகப்படுத்தப்படவேண்டிய அனைத்து விதமான அலங்கார பொருட்களையும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. செயலாளர் சித்திரை செல்வன் நன்றி கூறினார்.