×

ஆற்காடு அருகே மணல் கடத்திய வேன், மாட்டுவண்டி பறிமுதல்


ஆற்காடு, மார்ச் 28:  ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பாலாற்றுப்பகுதியில் இருந்து மாட்டுவண்டி மற்றும்  வேன்களில் மணல் கடத்தி செல்வதாக வாலாஜா வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், வருவாய் ஆய்வாளர் ஷம்ஷாத் தலைமையில் விஏஓ தாருமதி, உதவியாளர் வடிவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மேல்விசாரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வேன் மற்றும் ஒரு மாட்டு வண்டியை மடக்கி நிறுத்தினர். இதைப்பார்த்த அவர்கள் வண்டிகளை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். பின்னர், அதிகாரிகள் வேன் மற்றும் மாட்டு வண்டியை சோதனை செய்ததில் மணல் கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, மணலுடன் வேன் மற்றும் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து ஆற்காடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர். மேலும், தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

Tags : Van ,Arcot ,
× RELATED வியட்நாமை உலுக்கிய நிதி மோசடி வழக்கு; பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை