×

இடைப்பாடியில் கோயிலுக்குள் புகுந்து சுவாமி நகையை திருடிய வாலிபர் சுற்றிவளைப்பு

இடைப்பாடி, மார்ச் 27: இடைப்பாடி நாச்சிபாளையத்தில் உள்ள வீரமாத்தி அம்மன் கோயிலில் நேற்று மதிய வேளையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு வாலிபர் மட்டும் நீண்டநேரமாக பயபக்தியுடன் வழிபட்டு கொண்டிருந்தார். திடீரென அவர் கருவறைக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த முக்கால் பவுன் தாலிக்கொடியை திருடிக்கொண்டு தப்ப முயன்றார். இதனை கவனித்த பக்தர்கள் சிலர், அவரை மடக்கி பிடித்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகே இருந்த பொதுமக்கள் கோயிலுக்குள் சென்று வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர்.இதுகுறித்த தகவலின்பேரில், இடைப்பாடி போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை மீட்டு விசாரித்தனர். இதில், அவர் ஜலகண்டாபுரம் அருகே நரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சுரேஷ்(30) என்பது தெரிய வந்தது. ஆட்டையாம்பட்டி, இடைப்பாடி, பூலாம்பட்டி மற்றும் தேவூர் உள்ளிட்ட இடங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத மதிய வேளையில் கோயிலுக்குள் புகுந்து உண்டியல் பணம் மற்றும் நகையை திருடியது தொடர்பாக பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இதன்பேரில், இடைப்பாடி போலீசார் அவரை கைது செய்தனர். கோயிலுக்குள் புகுந்து பட்டப்பகலில் சுவாமி நகையை திருடிய வாலிபர் பொதுமக்களிடம் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : interval ,sculptor ,house ,
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி