×

போச்சம்பள்ளி அருகே செவிலியர் கடத்தல் விகாரம் பெண் உள்பட 5 பேர் கைது

கிருஷ்ணகிரி, மார்ச் 27:  போச்சம்பள்ளி அருகே தாதம்பட்டியை சேர்ந்த செவிலியர் கடத்தல் வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரு கே தாதம்ப ட்டி அப்பாவு நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் 6 வயதில் மகள் உள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தர்மபுரிக்கு காரை வாடகைக்கு ஓட்டிச்சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தமிழரசனுக்கு பழக்கம் ஏற்பட்டது. செவிலியரான அவர், தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவனையில் பணியாற்றி வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இதுகுறித்து செவிலியரின் உறவினர்களுக்கும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்ற செவிலியர் வீடு திரும்பவில்லை.இதையடுத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட உறவினர்களுக்கு அப்போது, அவர்களுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் செவிலியர் பேசியுள்ளார். அவர், தன்னை கடத்திச்சென்று ஒரு இடத்தில் அடைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், எந்த இடம் என்பதை அவரும் குறிப்பிடவில்லை.

  இதுதொடர்பாக தமிழரசனிடம் விசாரிப்பதற்காக செவிலியரின் தந்தை மற்றும் உறவினர்கள் கார், வேனில் தாதம்பட்டி கிராமத்திற்கு சென்றுள்ளனர். இதுகுறித்து தமிழரசனின் தம்பியிடம் விசாரித்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு பின்னர், கோஷ்டி மோதலாக மாறியது. இதில், செவிலியரின் தந்தை மற்றும் பெரியப்பா ஆகியோர் மண்டை உடைந்து படுகாயமடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், போச்சம்பள்ளி போலீசார் விரைந்து சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போச்சம்பள்ளி  காவல் ஆய்வாளர் கமலேசன்,  உதவி ஆய்வாளர் வசந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து  தமிழரசன் உறவினர்கள் ஜெகதீசன், தண்டபாணி, வேங்கடம்,  திருநாவுகரசு, வாசுகி  ஆகியோரை கைது செய்து சேலம் மத்திய சிறையில்  அடைந்தனர். மேலும் விசாரணை நடத்தியதில் தமிழரசன் இதேபோல் பல  பெண்களை காதலித்து ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

Tags : Pochampalli ,nurse kidnapping woman ,
× RELATED தடுப்பூசி போட்ட 2வது நாளில் ஒன்றரை மாத குழந்தை சாவு