×

சங்கரன்கோவிலில் பால்குட ஊர்வலம்

சங்கரன்கோவில், மார்ச் 27:  சங்கரன்கோவில் ஆதிசங்கர விநாயகர் கோயில் தெருவில் உள்ள தங்கமாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கொடை விழா நடைபெறும். இந்த ஆண்டு கொடை விழா கடந்த 19ம் தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான கொடை விழா, நேற்று நடந்தது. இதையொட்டி பால்குடம் வீதி உலா, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் சங்கரன்கோவில் டிஎஸ்பி ராஜேந்திரன், சமூக ஆர்வலர் சந்துரு, கோயில் கோமரத்தார் புருஷோத்தமன், தபால் அலுவலர் பாலசுப்பிரமணியன், ஆறுமுகநயினார் மகமை பொதுசங்க தலைவர் சங்கரநாராயணன், கவுரவ தலைவர்கள் சேது, சூரிய நாராயணன், செயலாளர் சங்கர், பொருளாளர் ராஜா, துணை தலைவர் ராமையா, செயற்குழு உறுப்பினர்கள் சேதுக்குமார், தெய்வநாயகம், சீதாராமன், கோமதிநாயகம், மாரியப்பன், முருகன், நிர்வாகிகள் சங்கரபாண்டியன், பாலசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், அரிமா சங்க தலைவர் அய்யாத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Balakuda ,Sankarankovil ,
× RELATED சங்கரன்கோவிலில் லோக் அதாலத் 127 வழக்குகளுக்கு தீர்வு