×

சொத்து தகராறில் தாய், அண்ணிக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது

கும்பகோணம், மார்ச் 27: சொத்து தகாறில் தாய், அண்ணியை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார். கும்பகோணம் அடுத்த தியாகராஜபுரத்தை சேர்ந்தவர் பஞ்சாபி மனைவி அஞ்சம்மாள் (70). இவர்களுக்கு நடராஜன், மகாதேவன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நடராஜன், மகாதேவன் ஆகியோருக்கு பூர்வீக சொத்து பிரிப்பது காரணமாக பல நாட்களாக பிரச்னை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மகாதேவனுக்கும், நடராஜன் குடும்பத்தினருக்கும் சொத்து பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் தாய் அஞ்சம்மாள், அண்ணன் நடராஜன் மனைவி ஜெயந்தி ஆகியோரை மகாதேவன், அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். இதில் காயமடைந்த அஞ்சம்மாள், ஜெயந்தி ஆகியோரை மீட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிந்து மகாதேவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : siblings ,property dispute ,
× RELATED அண்ணா-கலைஞர் ஓய்வுகொள்ளும் இடங்கள்...