×

பசுபதீசுவரர் கோயில் மடவளாக வீதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கும் அவல நிலை

கரூர், மார்ச் 27: ஈசுவரன் கோயில் வளாக வீதிகளில் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் பசுபதீசுவரர் கோயிலை சுற்றி மடவளாக வீதிகள் உள்ளன. இந்த வீதியில் வணிக வளாகங்கள், குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் போதுமான குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் தெருவோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. கோயிலை சுற்றி போதுமான குப்பை தொட்டிகளை வைத்து உடனுக்குடன் அவற்றை அகற்றி சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : ruins ,streets ,
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...