×

ஆடிட்டர் வீட்டில் கைவரிசை காரில் வந்து திருடும் கும்பல் கைது ஆந்திராவை சேர்ந்தவர்கள்

திண்டுக்கல், மார்ச் 27:  திண்டுக்கல்லில் ஆடிட்டர் வீட்டில் பணம், நகையை திருடிய ஆந்திராவை சேர்ந்த காரில் வந்து திருடும் கும்பலை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் விவோகனந்த நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (54). ஆடிட்டர். சம்பவத்தன்று இவர் வெளியூர் சென்றிருந்த போது, பட்டப்பகலில் கதவை உடைத்த மர்மநபர்கள் பீரோவிலிருந்த 3 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த நகர் வடக்கு போலீசார், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.இதில் ஆந்திரா மாநிலம், குண்டூரை சேர்ந்த லட்சுமி ராவ் (41), லிங்ராயர் (38) ஆகியோர் காரில் வந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், திருட்டுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags : gang ,gangsters ,home ,auditor ,Andhra Pradesh ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே காங்....