மணமேல்குடி,மார்ச்27: மணமேல்குடி அடுத்த கூத்தனூர் பகுதியில் உள்ள கொள்ளக்காடு பகுதியில் இருந்த தனியாருக்கு சொந்தமான தலமர காட்டில் தீடிரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது .இதில் தீ மளமளவென ஆரஸ்பதி காடு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது உடனே அந்த பகுதி மக்கள் அறந்தாங்கி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் .உடனே அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்தனர் .இந்த தீவிபத்தால் சுமார் 5ஏக்கர் ஆரஸ்பதி மரங்கள் எரிந்து நாசமாயின .