×

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனிமொழி பிரசாரம் செய்யும் இடங்கள்

தூத்துக்குடி, மார்ச் 27:தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி வாக்கு சேகரித்து வருகிறார். அவர் இன்று (27ம்தேதி) வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் கிழக்கு, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிக்கிறார். மாலை 4 மணிக்கு பட்டினமருதூரில் பிரசாரத்தை தொடங்கும் கனிமொழி தொடர்ந்து வேப்பலோடை, முத்துக்குமாரபுரம், வேடநத்தம் ஊராட்சி, வள்ளிநாயகபுரம், கே.சண்முகபுரம், சந்திரகிரி, கொல்லம்பரும்பு, மிளகுநத்தம், ஆதனூர், காட்டுநாயக்கன்பட்டி, எப்போதும்வென்றான், தளவாய்புரம், கன்னக்கட்டை, புங்கவர்நத்தம், குமரிகுளம், வாலம்பட்டி, கீழஈராலில் இரவு 9.30 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

நாளை (28ம்தேதி) கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார்.தொடர்ந்து மந்திதோப்பு, மேலப்பாண்டவர்மங்கலம், கீழப்பாண்டவர்மங்கலத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல், கரிசல்குளம், சிவந்திபட்டி துறையூர் தேவர் சிலை மாலை அணிவித்தல், வடக்கு திட்டங்குளம் தேவர் சிலை மாலை அணிவித்தல், இலுப்பையூரணி, கூசாலிபட்டி, லிங்கம்பட்டி பகுதிகளில் பிரசாரம் செய்து இரவு 9.30 மணிக்கு குலசேகரபுரத்தில் நிறைவு செய்கிறார். இக்கூட்டங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : district ,Thoothukudi ,preachers ,Kanimozhi ,places ,
× RELATED தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவினர் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும்