×

இந்தோ மலேசிய சர்வதேச கராத்தே போட்டி

ஸ்பிக்நகர், மார்ச் 27: விளாத்திகுளத்தில் சோபுகாய் கோஜுரியூ கராத்தே பள்ளி சார்பில் இந்தோ மலேசியா சர்வதேச கராத்தே போட்டி அம்பாள் சிபிஎஸ்இ பள்ளியில் நடந்தது.போட்டிகளுக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், அம்பாள் பள்ளியின் அறங்காவலருமான மார்க்கண்டேயன் தலைமை வகித்தார். இப்போட்டியில் இந்தியா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த வீரர்கள் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் ஏற்பாடுகளை சோபுக்காய் கோஜுரியூ கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளரும் தொழில்நுட்ப இயக்குனருமான ரென்சி சுரேஷ்குமார் ஏற்பாடு செய்தார். இதில் அம்பாள் வித்யாலயா பள்ளி செயலர் சுப்பா ரெட்டியார், முதல்வர் ஜெயகாந்த், நிர்வாக அலுவலர் நரசிம்மாராஜ், மாவட்ட பயிற்சியாளர் முத்துராஜா உட்படபலர் பங்கேற்றனர்.


Tags : Indo Malaysian International Karate Competition ,
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்