×

ஆத்தூரில் திமுக கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம்

ஆத்தூர், மார்ச் 26: கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர், கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக வேட்பாளர் கௌதம சிகாமணி பேசுகையில்,‘வரும் ஏப்ரல் 18ம் தேதி நாம் செய்யக்கூடிய ஒருவிரல் புரட்சியால், மோடியை வீட்டிற்கு அனுப்புவது; பிரதமராக ராகுல்காந்தியை அமர்த்துவது; எடப்பாடி அரசை வீட்டிற்கு அனுப்புவது; திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவது ஆகியவை நடக்கவுள்ளது. நம்முடைய கூட்டணி கட்சியினர், இன்னும் 20 தினங்களுக்குள் தங்களின் வாக்குச்சாவடி பகுதியிலே தங்கியிருந்து, திமுகவின் தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள திட்டங்களை எடுத்துக்கூறி, வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்,’ என்றார்.

கூட்டத்தில் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் துரைசாமி, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, உதயசூரியன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் பழனிமுத்து, சுந்தரம், சின்னதுரை, தமிழ்ச்செல்வன், குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் செழியன், முருகேசன், அகிலன், மணி(எ) பழனிசாமி, நகர செயலாளர் வேல்முருகன், ஐஜேகே வரதராஜன், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி, மதிமுக கோபால்ராஜ், விடுதலைச் சிறுத்தைகள் முத்து, இந்திய கம்யூனிஸ்ட் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ராமமூர்த்தி, சிவராமன், மல்லியகரை ராஜா, ஸ்டீல் ராஜா, அரங்கசாமி, லட்சுமணன், வரகூர் ஜெயபால், பத்திரம் மனோகரன், ராஜாமணி, ராஜசேகர், கமால்பாஷா, ஸ்டாலின், தங்கவேல், காசியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : DMK ,alliance party activists ,Athur ,
× RELATED சேலம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி...