×

மாணவன் தற்கொலை

போடி, மார்ச் 26: போடி மேல மச்சுதெருவைச் சேர்ந்தவர் ராஜா மகன் கோகுலகண்ணன்(16). இவர் போடியிலுள்ள ஒரு தனியார் மேல் நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சரியாக படிக்காததால் கோகுலகண்ணனை அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கோகுலகண்ணன், விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் போடி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, கோகுலகண்ணனை  ஏற்கனவே இறந்தது தெரிய ந்தது. போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : student ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...