×

விவசாயிகள் ஆர்வம் எப்ப வேணாலும் கீழே விழலாம் மின்கம்பத்தை கவனிக்காமல் செல்லும் அதிகாரிகள் தாமரைப்பாடியில்தான் இந்த அச்சம்

திண்டுக்கல், மார்ச் 26: தாமரைப்பாடியில் மின்நிலையம் அருகிலே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அதிகாரிகள் கண்டும், காணாமல் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் அருகே தாமரைப்பாடியில் உள்ளது  துணை மின்நிலையம். இதனருகே ஒரு மின்கம்பம் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சாய்ந்த நிலையிலே உள்ளது. இதனால் அவ்வழியே செல்பவர்கள் அச்சத்துடன் கடக்க
வேண்டியுள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மின்வாரிய அலுவலகம் அருகிலேயேதான் இந்த சாய்ந்த மின்கம்பம் உள்ளது. அலுவலகத்திற்கு தினமும் சென்று வரும் அதிகாரிகள், ஊழியர்களை இதனை கண்டும், காணமல் உள்ளனர். திருச்சியிலிருந்து திண்டுக்கல் வரும் சாலையோரத்தில் உள்ளது இந்த மின்கம்பம். இரவுநேரங்களில் அதிக பாரம் ஏற்றி வரும் லாரி மின்கம்பிகளில் மோதி அறுந்து விட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு சாயும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED தேசிய ரோல்பால் போட்டிக்கு தமிழக வீரர்களை வாழ்த்தி அனுப்பும் நிகழ்ச்சி