×

மணல் அள்ளி சென்ற லோடு ஆட்டோ பறிமுதல்

பாபநாசம், மார்ச் 26: கபிஸ்தலம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. பாபநாசம்  அடுத்த கபிஸ்தலம் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளிடம், காவிரி ஆற்றில் மணல்  திருட்டு அதிகளவில் நடந்து வருகிறது. இந்நிலையில் கபிஸ்தலம் அருகே  மணலூரில் சப் இன்ஸ்பெக்டர் ராகவன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் ரோந்து  பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ நிறுத்தி சோதனை  நடத்தினர். அதில் அனுமதியின்றி மணல் அள்ளி சென்றது தெரியவந்தது. இதையடுத்து  கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிந்து லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Tags : Sandy Lotus Auto ,
× RELATED ஒரத்தநாடு அருகே பின்னையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு