×

ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது சிறை சென்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

நாகை, மார்ச் 26: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை நகர மற்றும் வட்ட கிளையின் சார்பில் முப்பெரும் விழா நாகையில் நடைபெற்றது. விழாவிற்கு நகர தலைவர் இளமுருகு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லெட்சுமிநாராயணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார பொருளாளர் தனுசுமணி வரவேற்றார். விழாவில் பணி நிறைவு மற்றும் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு  மாநிலத் தலைவர் சுதாகரன் வாழ்த்துரை வழங்கினார். ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 300 ஆசிரியர்களுக்கும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது  சிறை சென்ற 11 பேருக்கும் மாநில பொதுச் செயலாளர் ரெங்கராஜன் பாராட்டு தெரிவித்தார்.

Tags : teachers ,jail ,protest ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...