×

பைக்கில் சென்றவர் தவறி விழுந்து சாவு

தரங்கம்பாடி, மார்ச் 26:  திருக்கடையூர் ரயில்வே தெருவை சேர்ந்த உத்திராபதி என்பவரது மகன் மணிமாறன் (19). கூலித்தொழிலாளி இவர் நேற்று முன்தினம் பைக்கில் ஆக்கூருக்கு சென்றுக்கொண்டிருந்தார். திருக்கடையூர் வேளாண்மைத்துறை அலுவலகம் எதிரே மற்றொரு வாகனத்தை முந்தி சென்றபோது எதிர்பாராமல் கீழே விழுந்தார். பலத்த காயங்களுடன் அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பொறையார்  இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது