×

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 5 ஆண்டுகளாக கேட்பாரற்று கிடக்கும் கழிவறை, வாகன நிறுத்த கட்டிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொள்ளிடம், மார்ச் 26:     கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 5 ஆண்டுகளா கேட்பாரற்று கிடக்கும் பொதுகழிவறை மற்றும் வாகன நிறுத்த கட்டிடங்களை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது கழிவறை கட்டிடமும்  வாகன நிறுத்த கட்டிடமும் அருகருகே உள்ளது. இந்த இரண்டு கட்டிடங்களும் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக எந்த பயனுமின்றி உள்ளது. இந்த கட்டிடங்களுக்கு எதிர் பகுதியில் யாரும் செல்லாதவாறு மரக்கன்றுகளை வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டிடங்கள் ஒன்றிய நிதியிலிருந்து கட்டப்பட்டதாகும். கட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாகி பயனின்றி கிடக்கிறது.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தினந்தோறும் பல டூவீலர்கள் வந்து சென்று கொண்டிருக்கிறது. அரசின் வீடு கட்டிக்கொள்ளும் பயனாளிகளும் தினந்தோறும் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒரு பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடமிருந்தும் எதிர்ப்பகுதியில் உள்ள வாகன நிறுத்தக்கட்டிடம் பயனற்று கிடக்கிறது .ஊராட்சி நிதியை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இரண்டு கட்டிடங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : petitioner ,office ,Panchayat Union ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...