×

முதியவரை தாக்கிய எலக்ட்ரீசியன் கைது

சிவகிரி, மார்ச் 26:   சிவகிரியை சேர்ந்தவர் கணபதி துப்புரவு தொழிலாளி. குமாரபுரத்தை சேர்ந்தவர் காளிதாஸ்(42) எலக்ட்ரீசியன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணபதி வீட்டில் காளிதாசன் மின் மோட்டாரை பழுது பார்த்துள்ளார். அதற்கு கூலியாக கணபதியிடம் இருந்து காளிதாஸ் ரூ.4500 பெற்றதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் கடந்த 21ம் தேதி சிவகிரி ராஜாஜி தெருவில் சென்றுகொண்டிருந்த கணபதியை மறித்து, மின் மோட்டார் பழுது பார்த்த வகைக்கு  மேலும் பணம் வேண்டுமென காளிதாஸ் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காளிதாஸ் கணபதியை  தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணபதி அளித்த புகாரின் பேரின் சிவகிரி எஸ்ஐ துரைசிங்கம்  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, எலக்ட்ரீசியன் காளிதாஸை கைது செய்தார்.

Tags : Electrician ,
× RELATED எடப்பாடி பொய் பிரசாரம் 24 மணி நேரம்...