×

தொழிலாளி உள்பட 2பேர் தற்கொலை

சாத்தான்குளம், மார்ச் 26: சாத்தான்குளம் அருகே கோமானேரி கிராமத்தை சேர்ந்தவர் நம்பிராஜன்(50) விவசாய தொழிலாளி. இவரது மகன், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் விபத்தில் இறந்தார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 22ம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

நாசரேத்: நாசரேத் அருகே உள்ள மேலவெள்ளமடம் தெற்குதெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் முப்பிடாதி (14). நாசரேத்தில் ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம்  மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  தூக்கு போட்டு கொண்டார்.  அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாசரேத்தில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முப்பிடாதி  இறந்தார். இதுகுறித்து நாசரேத் போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicides ,
× RELATED ஆன்லைன் கடனால் நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் 5,000 பேர் தற்கொலை