கள்ளக்குறிச்சி, மார்ச் 26: கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக அந்த கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் கோமுகிமணியனை வேட்பாளராக கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். அதனையடுத்து முதல் முறையாக சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்த வேட்பாளர் கோமுகிமணியனுக்கு அமமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் பிரபு எம்எல்ஏ தலைமையில் கள்ளக்குறிச்சி சுங்கவரிச்சாவடியில் 2000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பாண்டியன், மாவட்ட பிற அணி செயலாளர்கள் பேரவை பால்ராஜ், மாணவரணி சீனுவாசன், இளைஞரணி வஜ்ஜிரவேலு, வர்த்தக அணி சரவணன், வழக்கறிஞர் அணி சம்பத், மகளிர் அணி தனலட்சுமி, சிறுபான்மை பிரிவு பரத், ஒன்றிய செயலாளர்கள் மதுசூதனன், தங்கதுரை, ராஜேந்திரன், மாயவேலாயுதம், நகர செயலாளர்கள் ஜெயபிரகாஷ், நம்பி, மாரிகண்ணு, ராம்குமார், மாவட்ட பேரவை தலைவர்
பழனிவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பின்னர் ஊர்வலமாக சென்று கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு வேட்பாளர் கோமுகிமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.