×

பெண் நிலஅளவையரிடம் பட்டப்பகலில் 10 பவுன் பறிப்பு

ஆண்டிபட்டி, மார்ச் 22: ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாத்திமா (53) நில அளவையராக பணிபுரிகிறார். இவர் நேற்று கண்டமனூர் பிர்க்கா பகுதியில் நில அளவை பணியை முடித்து விட்டு உதவியாளர் முருகேசனுடன் டூவீலரில் பின்னாடி அமர்ந்து வந்தார். திருமலாபுரம் ரயில்வே கேட் அருகில் வரும் போது அவர்களுக்கு பின்னாடி டூவீலரில் வந்த இருவர், பாத்திமா கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். வண்டியிலிருந்து கீழே விழுந்த பாத்திமா காயமடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். க.விலக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : lands ,
× RELATED கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்...