×

சாலையை சரி செய்ய கோரிக்கை

தொண்டி, மார்ச் 22: தொண்டி வெள்ளைமணல் தெருவில் கடந்தம சில நாள்களுக்கு முன்பு ரோடு போடுவதற்க்காக கற்கள் பரப்பபட்டு அப்படியே கிடக்கிறது. இது வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. உடனடியாக சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னனர். தொண்டி பேருராட்சிக்கு உட்பட்ட வெள்ளை மணல் தெருவில் ரோடு போடுவதற்க்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சரளை கல் போடப்பட்டது. அத்துடன் சென்றவர்கள் மீண்டும் பணியை தொராமல் அப்படி போட்டுள்ளனர். இதனால் டூவீலரில் செல்வோர் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் விபத்தும் நடகிறது. அதனால் உடனடியாக சாலையை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறிதது தவ்கித் ஜமாத் மாவட்ட செயலாளர் செய்யது நெய்னா கூறுகையில், ‘ரோடு போட ஆயத்தமாகி கற்களை பரப்பிவிட்டனர். ஆனால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுவும் நடக்கவில்லை. சுமார் 10 நாட்களுக்கு மேலாக அப்படியே கிடக்கிறது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்ய வேண்டும்’ என்றார்.

Tags : road ,
× RELATED தாமதமாகும் தடுப்புக்கட்டை பணிகள்...