×

பழநியில் காருக்கு அடியில் பதுங்கிய 6 அடி மலைப்பாம்பு

பழநி, மார்ச் 22: பழநியில் காருக்கு அடியில் பதுங்கி இருந்த 6 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புப்படையினர் பிடித்தனர். பழநி பூங்கா ரோட்டில் தண்டபாணி மளிகைக்கடை வைத்துள்ளார். நேற்று கடை முன்பு இவரது கார் நின்று கொண்டிருந்தது. அப்போது காரின் அடியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பழநி தீயணைப்புப்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படையினர் பதுங்கி இருந்த 6 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் பாம்பை அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். பங்குனி உத்திர தேரோட்டத்தையொட்டி ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் பழநியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : courtyard ,
× RELATED ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில்...