×

அரிசி வியாபாரியிடம் ரூ.1.24 லட்சம் பறிமுதல்

புளியங்குடி, மார்ச் 22:  சேர்ந்த   மரம்-சாம்பவர்வடகரை ரோட்டில் பறக்கும்படை பொறுப்பு அதிகாரி கிரேட் சர்ச்சில் ஜெபராஜ் தலைமையில் சேர்ந்தமரம் சிறப்பு எஸ்ஐ கணேசன், ஏட்டு சந்தனபாண்டி மற்றும் போலீசார்  நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை சோதனையிட்டதில்  ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து காரில் வந்த தென்காசி பள்ளி வாசல் தெரு சிக்கந்தர் மகன் முகம்மது அலி(20) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் சுரண்டையில் அரிசி விற்ற பணம் என்று அவர் கூறினார். தொடர்ந்து உரிய ஆவணங்கள்  காட்டப்பட்டதால் கைப்பற்றிய பணம் அவரிடம் திருப்பிக்கொடுக்கப்பட்டது.

Tags :
× RELATED ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை