×

தென்காசியில் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தென்காசி, மார்ச் 22: தென்காசியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.தலைமை வகித்தார். அதிமுக மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், நகர செயலாளர் சுடலை, பொதுக்குழு கசமுத்து, நகர நிர்வாகிகள் வெள்ளப்பாண்டி, முருகன்ராஜ், பட்டுபூச்சி பீர்முகம்மது, பூக்கடை சரவணன், மாரிமுத்து, முத்துக்குமாரசாமி, சுடலைமணி, சிந்தாமணி காமராஜ், ரமேஷ், அமுல்ராஜ், சங்கரநாராயணன், குணம், பா.ஜ தொகுதி பொறுப்பாளர் அன்புராஜ், நகர தலைவர் திருநாவுக்கரசு, ராஜ்குமார், முத்துக்கிருஷ்ணன், மந்திரமூர்த்தி, கருப்பசாமி, மூர்த்தி, ஐயர், பாலசுப்பிரமணியன், புதிய தமிழகம் அய்யப்பன், மாடசாமி, சந்திரன், மாரியப்பன், சுரேஷ், கணேசன், த.மா.கா.கண்ணன், சபரிமுருகேசன், மூக்கையா, வெள்ளத்துரை, தேமுதிக சுடலைமணி, சிவராமன், சுப்பிரமணியன் , பாமக குலாம், பழனிசாமி, சங்கரநாராயணன், பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ.பேசியதாவது, தென்காசியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமியை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியின் சாதனைகளை மக்களிடையே எடுத்துக்கூறி தீவிரமாக வாக்குகள் சேகரிக்க வேண்டுமென்றார். பா.ஜ. நகர தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

Tags : NDT ,consultant meeting ,Tenkasi ,
× RELATED தென்காசி மாவட்டம்; பழைய குற்றால...