×

நாலுமாவடியில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம்

நாசரேத், மார்ச் 22: நாலுமாவடியில் நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் அற்புத விடுதலை பிரார்த்தனை கூட்டம், நேற்று காலை 10 மணி முதல் 2 மணி வரை நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடினர். இயேசு விடுவிக்கிறார் ஊழியர் அப்பாத்துரை சிறப்பு செய்தி அளித்து பிரார்த்தனை செய்தார். குடும்ப ஆசீர்வாதம், வியாதியஸ்தர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags : prayer meeting ,Nalumavadi ,
× RELATED நாலுமாவடி மெயின் ரோட்டில் தேங்கிக்...